Saturday, May 24, 2014

12ஆம் ஆண்டு செந்தமிழ் விழா 2014

வணக்கம். கடந்த 3.5.2014, சனிக்கிழமை, தேசிய வகை விவேகானந்தா தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், காலை 8.00 மணி முதல் மதியம் மணி 12.30 வரை, சிலாங்கூர் மாநில அளவிலான 12ஆம் ஆண்டு செந்தமிழ் விழா 2014 சிறப்பாக நடைபெற்றது. 

இவ்விழா மாநில கல்வி இலாகா, தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டிலும் மலேசிய நண்பன் நாளிதழின் ஆதரவிலும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

விழாவினை சிறப்புச் செய்யும் வகையில் மலேசிய நண்பன் நாளிதழின் நிருவாகத் தலைவர் மதிப்புமிகு டத்தின் ரோக்கியா சிக்காந்தர் பாட்சா அவர்கள் வருகை தந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் (தமிழ்ப்பிரிவு) தமிழ்த்திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் முன்னிலை வகித்தார். 

இச்செந்தமிழ் விழாவில் கவிதை ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதும் போட்டி ஆகியவை இடம் பெற்றிருந்தன. 














No comments:

Post a Comment