Saturday, June 22, 2013

கவிதை ஒப்புவிக்கும் போட்டி பெட்டாலிங் பெர்டாணா மாவட்டம் 2013

வணக்கம். கடந்த 22.06.2013சனிக்கிழமைபூச்சோங் பெர்மாய் இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் பெர்டாணா மாவட்ட அளவிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கீழ்நிலைப் பிரிவில் 32 போட்டியாளர்களும் மேல்நிலைப் பிரிவில் 24 போட்டியாளர்களும் பங்குப் பெற்றனர். மேலும்சிறப்பு வருகையாளராக சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களும் கலந்து சிறப்பித்தார்.

கீழ்நிலைப்பிரிவில் முதல் இடத்தைச் சுபாங் ஊத்தாமா இடைநிலைப்பள்ளியும் இரண்டாம் நிலையை ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியும் தட்டிச் சென்றன.

மேல்நிலைப்பிரிவில் முதல் நிலையைப் பூச்சோங் ஊத்தாமா1 இடைநிலைப்பள்ளியும்  இரண்டாம் இடத்தை ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியும் பெற்றன.

வெற்றிப் பெற்ற இந்த நான்கு போட்டியாளர்களும் மாநில அளவிலான போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

இவ்வேளையில்இப்போட்டியினைச் சிரமம் பாராது ஏற்று நடத்திய பூச்சோங் பெர்மாய் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களான திருமதி சரோஜா அவர்களுக்கும் திருமதி செல்லம் அவர்களுக்கும் மற்றும் அவர்தம் மாணவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். 












No comments:

Post a Comment