வணக்கம். கடந்த 20.5.2013, திங்கட்கிழமை, கிள்ளான் புக்கிட்
திங்கி 2, ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் எஸ்.பி.எம். தமிழ்மொழிப்
பயிலரங்கம், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின், தமிழ்ப்பிரிவு, உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இப்பயிலரங்கம் ஆசிரியர்கள் திரு. முனுசாமி, திரு. பரந்தாமன், திருமதி சுமதி, திருமதி கனகலெட்சுமி மற்றும் திரு. கோபாலன் ஆகியோரால் வழி நடத்தப்பட்டது.
இப்பயிலரங்கினூடே, தமிழ்த்தாய் திருமதி இரத்தினவள்ளி விஜயராஜ் அம்மையார் அவர்களின் நிதியுதவியின்
மூலம், நூல் வடிவம் பெற்ற ‘எஸ்.பி.எம். தேர்வுக் கணைகள்’ என்ற பயிற்சி நூல் அம்மையாரின் திருக்கரங்களால்
வெளியீடு கண்டது.
இப்பயிலரங்கில் கலந்து சிறப்பித்த அம்மா இரத்தினவள்ளி அம்மையாருக்கும் சிறப்பு வருகையாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
No comments:
Post a Comment