Monday, September 7, 2015

சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு

வணக்கம். கடந்த 4.9.2015, வெள்ளிக்கிழமை, கிள்ளான் ஹொங் ஹோய் சீனப்பள்ளி மண்டபத்தில், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா தமிழ்ப் பிரிவின் ஏற்பாட்டில் சிலாங்கூர் மாநிலத் தமிழாசிரியர் கருத்தரங்கு காலை மணி 8.00 முதல் பிற்பகல் 3.30 வரை நடைபெற்றது. 

இக்கருத்தரங்கை மாநிலக் கல்வி இலாகாவின் துணை இயக்குநர் துவான் ஹாஜி முகமட் சாலே பின் முகமட் காசிம், S.I.S. அவர்களால் அதிகாரப் பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் கல்விச் சவால்களைச் சமாளிக்க, நம்மைத் தயார் செய்யும் பொருட்டு இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர்கள், இடைநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரின் படைப்புகள் அரங்கேறின. இவை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நம் கற்றல் கற்பித்தலுக்குப் பெரும்துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை.  காலத்திற்கு ஏற்றவாறு தமிழாசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள இக்கருத்தரங்கு உதவும்.  சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவுவின் முதன்மை கல்வி இயக்குநர் மதிப்புமிகு இராமன் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலில் இக்கருத்தரங்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 







































No comments:

Post a Comment