வணக்கம். கடந்த 28.8.2015, வெள்ளிக்கிழமை, காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 2.30 வரை, பயிற்சிப் பிரிவு, சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா, துர்ஷினா அரங்கில், எஸ்.பி.எம். இலக்கியம் (2016 - 2020) பயிலரங்கு மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்மொழிப் பிரிவின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
மலாய்மொழிப் பிரிவின் தலமை உதவி இயக்குநர் இஞ்சே அஹ்மட் கமால் அவர்களால் தொடக்கி வைக்கப்பட்ட பிப்ப்யிலரங்கில் சுமார் 70 இலக்கியம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் பங்குபெற்றுச் சிறப்பித்தனர்.
இப்பயிலரங்கில், புதிய பாடநூல்கள், பாட நூல்களின் விளக்கம்,தேர்வுக்கான கேள்விகளின் அமைப்பு முறை போன்றவை முதன்மை பயிற்றுநர்களால் சிறந்த முறையில் விளக்கப்பட்டது.
No comments:
Post a Comment