Monday, September 23, 2013

கோம்பாக் மாவட்ட எஸ்.பி.எம். & பி.எம்.ஆர். தமிழ்மொழி தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கு

வணக்கம். கோம்பாக் மாவட்ட கல்வி இலாகாவும் கோம்பாக் மாவட்ட தமிழ்மொழி பணித்தியமும் இணந்து, கடந்த சனிக்கிழமை 21.09.2013, காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 1.00 வரை தாமான் செலாயாங் இடைநிலைப்பள்ளியிலும் ஸ்ரீசெலாயாங் இடைநிலைப்பள்ளியிலும்   இம்மாவட்டத்திலுள்ள அனைத்து எஸ்.பி.எம். & பி.எம்.ஆர். மாணவர்களுக்காகத் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். 



இப்பயிலரங்கு, ஆசிரியை திருமதி உஷா அவர்களின் பெரு முயற்சியினாலும் ஆசிரியை  திருமதி நிர்மலா மற்றும் ஆசிரியர்கள் திரு.மனோகரன்,  திரு. பீட்டர் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் திரு. இரவிசந்தர் அவர்களும் தம் ஆதரவினை வழங்கினார்.

ஆசிரியர் திரு.ச.தமிழன்பன் அவர்கள் பி.எம்.ஆர். மாணவர்களுக்கான பயிலரங்கை வழிநடத்திய வேளையில்,  ஆசிரியர்கள் திரு.முனுசாமி அவர்களும் ஆசிரியர் திரு.சுந்தரமூர்த்தி அவர்களும் எஸ்.பி.எம். மாணவர்களுக்கான பயிலரங்கை வழிநடத்தினர். 

இந்நிகழ்ச்சியை மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப் பிரிவு உதவி இயக்குநர் திரு.இராமன் அண்ணாமலை அவர்கள் உரை நிகழ்த்தி அதிகாரபூர்வமாக நிறைவு செய்தார்.



இவ்வேளையில் ஆசிரியைகள்  திருமதி உஷா மற்றும் திருமதி நிர்மலா அவர்களுக்கும் ஆசிரியர்கள் திரு. மனோகரன் மற்றும் திரு.பீட்டர் அவர்களுக்கும் நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

No comments:

Post a Comment