Saturday, September 7, 2013

எஸ்.பி.எம். இலக்கியப் பாடத் தேர்வுப் பயிலரங்கு 2013

வணக்கம். சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவின் தலைவர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும் , மலேசிய முத்தமிழ்ச் சங்கம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழகம் ஆகிவற்றின் ஆதரவிலும் , கடந்த 7.9.2013 (சனிக்கிழமை) காலை 8.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரை மலாயாப் பல்கலைக்கழகம் மொழி மொழியியல் புலத்தில்  எஸ்.பி.எம். இலக்கியப் பாடத் தேர்வுக்கான பயிலரங்கு  ஒன்று  நடத்தப்பட்டது. இதில் 250 படிவம் ஐந்து  மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இப்பயிலரங்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.  முதற்பிரிவு கவிதைப் பிரிவாகும். இதனை  ஆசிரியர் தமிழ்த்திரு. ந.பச்சைபாலன் அவர்கள் வழிநடத்தினார். 

இரண்டாம் பிரிவு, நாடகப் பிரிவாகும். இதனை  ஆசிரியர் தமிழ்த்திரு. கி.இளம்பூரணன் அவர்கள் வழிதடத்தினார். 

முன்றாம் பிரிவான  நாவல் பிரிவை (இலட்சியப் பயணம்) ஆசிரியர்  தமிழ்த்திரு. கோவி. மணிமாறன் சிறப்பாகப் படைத்தார். 

இவ்வேளையில், மலேசிய முத்தமிழ்ச் சங்கத்திற்கும்  மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழகத்திற்கும் எங்களின் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

*பயிலரங்கில் வழங்கப்பட்ட குறிப்புகளை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 

http://www.4shared.com/office/jDu_AI4S/____.html














No comments:

Post a Comment