Monday, June 18, 2012

பெட்டாலிங் பெர்டானா மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2012

வணக்கம். பெட்டாலிங் பெர்டானா மாவட்ட இடைநிலைப்பள்ளிகளுக்கு இடையிலான கவிதை ஒப்புவிக்கும்  போட்டி,  மாநில, மாவட்ட  கல்வி  இலாகாகளின் ஏற்பாட்டிலும், பூச்சோங் பெர்மாய் இடைநிலைப்பள்ளியின் ஒத்துழைப்புடனும், 16.6.2012, சனிக்கிழமை, அப்பள்ளி மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.  

காலை மணி 9.00 அளவில் தொடங்கிய இப்போட்டியை மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் முற்பகல் 11.00 மணியளவில் வெற்றியாளர்களுக்குப் பரிசளித்து நிறைவு செய்து வைத்தார்.

இக்கவிதை ஒப்புவிக்கும் போட்டி இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

முதல் பிரிவு : கீழ்நிலை பிரிவு (படிவம் 1 முதல் 3 வரை)

முதல்நிலை வெற்றியாளர்          :   நித்தியா ராஜன்   (பூச்சோங் பெர்மாய் 
                                                                       இடைநிலைப்பள்ளி)

இரண்டாம்நிலை வெற்றியாளர் :   இராஜகுமார் உதயகுமார்  (பண்டார் 
                                                                       கின்ராரா பிரிவு 4 இடைநிலைப்பள்ளி) 


இரண்டாம் பிரிவு: மேல்நிலை (படிவம் 4 முதல் 5 வரை)

முதல்நிலை வெற்றியாளர்           :     சர்வேஷ்வரன்  ஆறுமுகம் ( தாமான் 
                                                                          ஸ்ரீமூடா இடைநிலைப்பள்ளி)

இரண்டாம்நிலை வெற்றியாளர்  :     விழிராஸ்னி கருணைராஜன் (ஆலாம்  
                                                                           மேகா இடைநிலைப்பள்ளி)










No comments:

Post a Comment