வணக்கம். கடந்த 22.06.2013, சனிக்கிழமை, பூச்சோங் பெர்மாய் இடைநிலைப்பள்ளியில் பெட்டாலிங் பெர்டாணா மாவட்ட அளவிலான
கவிதை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் கீழ்நிலைப் பிரிவில் 32
போட்டியாளர்களும் மேல்நிலைப் பிரிவில் 24 போட்டியாளர்களும் பங்குப் பெற்றனர்.
மேலும், சிறப்பு வருகையாளராக சிலாங்கூர் மாநில கல்வி
இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களும் கலந்து
சிறப்பித்தார்.
கீழ்நிலைப்பிரிவில் முதல் இடத்தைச் சுபாங் ஊத்தாமா
இடைநிலைப்பள்ளியும் இரண்டாம் நிலையை ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியும் தட்டிச் சென்றன.
மேல்நிலைப்பிரிவில் முதல் நிலையைப் பூச்சோங் ஊத்தாமா1
இடைநிலைப்பள்ளியும் இரண்டாம் இடத்தை ஸ்ரீ மூடா இடைநிலைப்பள்ளியும்
பெற்றன.
வெற்றிப் பெற்ற இந்த நான்கு போட்டியாளர்களும் மாநில
அளவிலான போட்டிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.