வணக்கம். கடந்த 04.08.2013, ஞாயிற்றுக்கிழமை, கிள்ளான் டேவான் ஹம்சாவில் 2ஆம் ஆண்டு டான்ஸ்ரீ சோமா சுழற்கிண்ண நாடக விழா 2013 காலை மணி 8.30 முதல் இரவு மணி 9.00 வரை நடைபெற்றது.
இதில் சிலாங்கூர் மாநிலத்திலிருந்து ஒன்பது குழுக்கள் பங்கு பெற்றன. இக்குழுக்களில் பெஸ்தாரி ஜெயாவில் அமைந்துள்ள ராஜா மூடா மூசா இடைநிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் இரண்டவது இடத்தைப் பெற்று, RM1500-ஐ பரிசாக அடைந்து, மாநிலத்திற்குப் பெருமை தேடி தந்துள்ளனர்.
இதில் பங்கேற்று நடித்த மாணவர்களுக்கும் அவர்களை இயக்கிய ஆசிரியர்களுக்கும் நம் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக.
No comments:
Post a Comment