வணக்கம். கடந்த 28.2.2013, வியாழக்கிழமை, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டில் கிள்ளான், புக்கிட் திங்கி, ஹைலண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில், சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியர்களுக்கான பயிலரங்கு நடைபெற்றது.
இப்பயிலரங்கை, ஆசிரியர்கள் திரு.பரந்தாமன் , திரு.கோபாலன், திருமதி மகாலெட்சுமி ஆகியோர் மிகச்சிறப்பாக வழிநடத்திச் சென்றனர். இவ்வாண்டு பி.எம்.ஆர். தேர்வில் தமிழ்மொழிப் பாடத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி அடைய வழிகாட்டும் நோக்கில் ஆசிரியர்களுக்கு இப்பயிலரங்கை மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்கள் ஏற்பாடு செய்தார்.