வணக்கம். கடந்த 21.4.2012, சனிக்கிழமை, பந்திங் ஸ்ரீ ஜுக்ரா மண்டபத்தில் பத்தொன்பதாம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரஙபாணி
சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி வெகு சிறப்பாக நடந்தேறியது. பந்திங் மெத்தடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக்
கழகமும் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவும் இணைந்து
இப்போட்டியினை ஏற்பாடு செய்திருந்தன.
போட்டியைச் சிறந்த முறையில் வழிநடத்திய ஆசிரியர்கள்
ஆடல், பாடல் போன்ற மாணவர்களின் படைப்புகளுடன்
தொடங்கிய நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் பங்குப்பெற்றன. இப்புதிர்ப்போட்டியில்
சுங்கை பிலெக் இடைநிலைப்பள்ளி மாணவர்க்குழு
வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது.
முதல் நிலயில் வெற்றிப் பெற்ற சுங்கை பிலெக் இடைநிலைப்பள்ளி
முதல் மூன்று நிலைகளில் வெற்றிப் பெற்ற குழுவினர்
இந்நிகழ்ச்சியில், ஆசிரியப் பெருந்தகை
ஐயா குழந்தைவேலு சுப்பையா அவர்கள், 2012ஆம் ஆண்டிற்கான தமிழ்வேள் கோ.சாரங்கபாணியார்
விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
மதிப்புமிகு டத்தோ ஆ.சோதிநாதன் அவர்கள்
ஆசிரியப் பெருந்தகை
ஐயா குழந்தைவேலு சுப்பையா அவர்களுக்குச்
சிறப்புச் செய்கிறார்.
நிகழ்ச்சியின் சிறப்பு வருகையாளர்கள்
பள்ளிமுதல்வர் சிறப்பிக்கப்படுகிறார்
பள்ளி முதல்வர் திரு. வூன் பூன் இயாட் , மாநிலக் கல்வி இலாகாவின் உதவி இயக்குநர் திரு.இராமன் அண்ணாமலை, மயில் மாத இதழின் ஆசிரியர் மதிப்புமிகு டத்தோ ஆ. சோதிநாதன் ஆகியோர் நிகழ்ச்சியில் உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த ஆசிரியர்கள்
No comments:
Post a Comment