Monday, April 11, 2016

23-ஆம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி

வணக்கம். கடந்த 12.3.2016, சனிக்கிழமை, காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பந்திங் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் எம்.கே. மண்டபத்தில் 23-ஆம் ஆண்டு தமிழ்வேள் கோ.சாரங்கபாணி சுழற்கிண்ணப் புதிர்ப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. 


இப்புதிர்ப்போட்டி பந்திங் மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் ஏற்பாட்டிலும் மாநில கல்வி இலாகா, தமிழ்ப்பிரிவின் ஆதரவுடனும் நடைபெற்றது.

இப்போட்டியில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள சுமார் 80 இடைநிலைப் பள்ளிகள் தங்களின் திறமைகளைக் காட்டின. 


இவ்விழாவில் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் தமிழ்த்திரு. ஏ.சகாதேவன் அவர்களும் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் தமிழ்த்திரு. இராமன் அண்ணாமலை அவர்களும் தஞ்சோங் சிப்பாட் இடைநிலைப்பள்ளியின் முதல்வர் திரு.இராஜேந்திரன் அர்களும் கலந்து சிறப்பித்தனர். 



பல்லாண்டு காலம் ஆசிரியராக இருந்து அரும்பணி செய்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்த்திரு .மணியம் அவர்களும்  தமிழியல் தொண்டர் தமிழ்த்திரு. கதிரவன் அவர்களும் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அரும்பணி விருதளித்துச் சிறப்பிக்கப்பட்டனர். 


இப்போட்டியில் சுங்கை பிலேக் இடைநிலைப்பள்ளி வாகை சூடி சுழற்கிண்ணத்தைச் தட்டிச் சென்றது.