Saturday, August 22, 2015

எஸ்.டி.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கு

வணக்கம். இன்று , 22.8.2015, சனிக்கிழமை, காலை மணி 8.00 தொடக்கம் பிற்பகல் மணி 1.30 வரை கோலாலம்பூர், மலாயா பல்கலைக்கழகம், கலைபுலத்தின் 'C' விரிவுரை மண்டபத்தில் எஸ்.டி.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கு சிறப்பாக நடந்தேறியது.  இப்பயிலரங்கு மலேசியக் தேர்வு மன்றம், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்றது. 

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின் வரவேற்புரையுடன் இப்பயிலரங்கு தொடங்கியது.  மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவர் முனைவர் திரு. மோகனதாஸ், துணை பேராசிரியர் முனைவர் திரு. குமரன் மற்றும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் முன்னாள் தலைவர் முனைவர் திரு.கந்தசாமி ஆகியோரால் இப்பயிலரங்கு சிறப்பாக வழிநடத்தப்பட்டது.