வணக்கம். இன்று, 7.5.2015, வியாழக்கிழமை, காலை மணி 8.30 முதல் கிள்ளான் ஹைலேண்ட்ஸ் (புக்கிட் திங்கி 2) தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பயிலரங்கம் சிறப்பாக நடந்தேறியது.
இப்பயிலரங்கம், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் ஆதரவோடு மலேசிய தமிழ்ப் பண்பாட்டியக்கம் ஏற்பாடு செய்து நடத்தியது. இவ்வேளையில் அவ்வியக்கத்தின் தலைவர் திரு. ப.கு.சண்முகம் அவர்களுக்கும் அவர்தம் செயலவை உறுப்பினர்களுக்கும் நன்றியினைச் சமர்ப்பிக்கின்றோம்.