Saturday, September 6, 2014

எஸ்.டி.பி.எம். தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கம்

வணக்கம்.  தமிழ்மொழியைத் தேர்வுப் பாடமாக எடுக்கும் எஸ்.டி.பி.எம். மாணவர்களுக்கு மலேசியத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின்  இசைவுடனும் ஆதரவுடனும் கடந்த சனிக்கிழமை, 6.9.2014, காலை மணி 8.00 முதல் நண்பகல் 1 மணி வரை கிள்ளான் ஸ்ரீ முருகன் கல்வி மையத்தில் தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கம் ஒன்றனை ஏற்பாடு செய்து நடத்தியது. 

மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்க தேசியத் தலைவர் திரு. ப. கு. சண்முகம் அவர்கள் தலைமை தாங்கினார். சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப் பிரிவு உதவி இயக்குநர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின் உரையுடன் இப்பயிலரங்கம் தொடங்கியது. மேலும், மலேசியத் தமிழ்ப் பண்பாட்டியக்க தேசியத் துணைத் தலைவர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் மாணவர்களுக்குச் சில நடைமுறை விதிகளை அறிவுறுத்தினார். 

ஆசிரியர் கோவி.மணிமாறன் முதல் பருவ மாணவர்களுக்கும்  ஆசிரியர்  கோவி. குமரன் மூன்றாம் பருவ மாணவர்களுக்கும் இப்பயிலரங்கைச் சிறப்பாக வழிநடத்தினர். 









Tuesday, September 2, 2014

தமிழ்மொழி பயிற்சித் தொகுதி PT3

வணக்கம். சிலாங்கூர் மாநில தமிழ்மொழிப் பணித்தியம் மூன்றாம் படிவ ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் பொருட்டு பயிற்சித் தொகுதி ஒன்றனை வெளியீடு செய்துள்ளது. இப்பயிற்சித் தொகுதியை ஆசிரியர்கள் தங்கள் மாவட்ட பணித்தியப் பொறுப்பாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சித் தொகுதி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரும் பயனாக இருக்கும் என நம்புகிறோம். நன்றி.