Monday, September 23, 2013

கோம்பாக் மாவட்ட எஸ்.பி.எம். & பி.எம்.ஆர். தமிழ்மொழி தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கு

வணக்கம். கோம்பாக் மாவட்ட கல்வி இலாகாவும் கோம்பாக் மாவட்ட தமிழ்மொழி பணித்தியமும் இணந்து, கடந்த சனிக்கிழமை 21.09.2013, காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 1.00 வரை தாமான் செலாயாங் இடைநிலைப்பள்ளியிலும் ஸ்ரீசெலாயாங் இடைநிலைப்பள்ளியிலும்   இம்மாவட்டத்திலுள்ள அனைத்து எஸ்.பி.எம். & பி.எம்.ஆர். மாணவர்களுக்காகத் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டிப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தனர். 



இப்பயிலரங்கு, ஆசிரியை திருமதி உஷா அவர்களின் பெரு முயற்சியினாலும் ஆசிரியை  திருமதி நிர்மலா மற்றும் ஆசிரியர்கள் திரு.மனோகரன்,  திரு. பீட்டர் ஆகியோரின் ஒத்துழைப்புடனும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் திரு. இரவிசந்தர் அவர்களும் தம் ஆதரவினை வழங்கினார்.

ஆசிரியர் திரு.ச.தமிழன்பன் அவர்கள் பி.எம்.ஆர். மாணவர்களுக்கான பயிலரங்கை வழிநடத்திய வேளையில்,  ஆசிரியர்கள் திரு.முனுசாமி அவர்களும் ஆசிரியர் திரு.சுந்தரமூர்த்தி அவர்களும் எஸ்.பி.எம். மாணவர்களுக்கான பயிலரங்கை வழிநடத்தினர். 

இந்நிகழ்ச்சியை மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப் பிரிவு உதவி இயக்குநர் திரு.இராமன் அண்ணாமலை அவர்கள் உரை நிகழ்த்தி அதிகாரபூர்வமாக நிறைவு செய்தார்.



இவ்வேளையில் ஆசிரியைகள்  திருமதி உஷா மற்றும் திருமதி நிர்மலா அவர்களுக்கும் ஆசிரியர்கள் திரு. மனோகரன் மற்றும் திரு.பீட்டர் அவர்களுக்கும் நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Saturday, September 14, 2013

எஸ்.பி.எம். இலக்கியம் & தமிழ்மொழி முன்னோட்டத் தேர்வுத் தாள்கள் 2013

வணக்கம். எஸ்.பி.எம். இலக்கியம் & தமிழ்மொழி  முன்னோட்டத்தேர்வுத் தாள்கள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். பதிவிறக்கம் செய்து பயன்பெறவும். நன்றி.!

http://www.4shared.com/folder/m3ZhmL-f/___2013.html   

http://www.4shared.com/folder/MuZEUuu-/__2013.html

Saturday, September 7, 2013

எஸ்.பி.எம். இலக்கியப் பாடத் தேர்வுப் பயிலரங்கு 2013

வணக்கம். சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவின் தலைவர் திரு. இராமன் அண்ணாமலை அவர்களின் ஏற்பாட்டிலும் , மலேசிய முத்தமிழ்ச் சங்கம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழகம் ஆகிவற்றின் ஆதரவிலும் , கடந்த 7.9.2013 (சனிக்கிழமை) காலை 8.00 முதல் பிற்பகல் 2.00 மணி வரை மலாயாப் பல்கலைக்கழகம் மொழி மொழியியல் புலத்தில்  எஸ்.பி.எம். இலக்கியப் பாடத் தேர்வுக்கான பயிலரங்கு  ஒன்று  நடத்தப்பட்டது. இதில் 250 படிவம் ஐந்து  மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இப்பயிலரங்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.  முதற்பிரிவு கவிதைப் பிரிவாகும். இதனை  ஆசிரியர் தமிழ்த்திரு. ந.பச்சைபாலன் அவர்கள் வழிநடத்தினார். 

இரண்டாம் பிரிவு, நாடகப் பிரிவாகும். இதனை  ஆசிரியர் தமிழ்த்திரு. கி.இளம்பூரணன் அவர்கள் வழிதடத்தினார். 

முன்றாம் பிரிவான  நாவல் பிரிவை (இலட்சியப் பயணம்) ஆசிரியர்  தமிழ்த்திரு. கோவி. மணிமாறன் சிறப்பாகப் படைத்தார். 

இவ்வேளையில், மலேசிய முத்தமிழ்ச் சங்கத்திற்கும்  மலாயாப் பல்கலைக்கழகத் தமிழ்மொழிக் கழகத்திற்கும் எங்களின் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

*பயிலரங்கில் வழங்கப்பட்ட குறிப்புகளை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்ளவும். 

http://www.4shared.com/office/jDu_AI4S/____.html