வணக்கம். கடந்த 13.07.2013, சனிக்கிழமை, சிலாங்கூர் மாநில கல்வி
இலாகா உத்தாமா மண்டபத்தில், காலை மணி 8.00 முதல் பிற்பகல் மணி 1.00 வரை, மாநில கல்வி இலாகா தமிழ்ப்பிரிவின்
ஏற்பாட்டிலும் மலேசிய நண்பன் தமிழ் நாளிதழின் ஆதரவிலும் மாநில இடைநிலைப்பள்ளி மாணவர்களின் 11-ஆம் ஆண்டு கவிதை ஒப்புவிக்கும் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது.
கீழ்நிலைப் பிரிவில் :-
முதற்பரிசு : கோவலன்
சுப்பிரமணியம் (SMK JALAN REKO)
இரண்டாம் பரிசு : சரஸ்வதி தேவி கணேஷ் (SMK SUBANG UTAMA)
மூன்றாம் பரிசு : மேனகா யாசுதேவர் (SMK DATO HJ.KAMARUDDIN)
மேல்நிலை பிரிவில்:-
முதற்பரிசு : பூவரசன்
சிதம்பரநாதன் (SMK KUALA KUBU BARU)
இரண்டாம் பரிசு : ஹரிஹரன் பன்னீர்செல்வம்
(SMK
SRI TANJUNG)
மூன்றாம் பரிசு : பூவரசி தென்னரசு (SMK JALAN REKO)
விழாவினைச் சிறப்புச் செய்யும்
வகையில் மலேசிய நண்பன் நாளிதழின் நிருவாக இயக்குநர்
மதிப்புமிகு டத்தோ ஷாப்பி ஜமான் பின் சிக்கந்தர் பாட்ஷா அவர்கள் வருகை புரிந்து வெற்றி
பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளை எடுத்து வழங்கினார். மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநர்
(தமிழ்ப்பிரிவு) தமிழ்த்திரு. இராமன் அண்ணாமலை முன்னிலை வகித்தார்.