Tuesday, August 7, 2012

சிலாங்கூர் மாநில கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2012


சா ஆலாம் சியாஸ்ட் அரங்கில் கடந்த 30.06.2012 சனிக்கிழமை, சிலாங்கூர் மாநில கல்வி இலாகா தமிழ்ப்பிரிவின் ஏற்பாட்டிலும் மலேசிய நண்பன் நாளிதழின் ஆதரவுடனும் மாநில இடைநிலைப்பள்ளிகளுக்கிடையிலான கவிதை ஒப்புவிக்கும் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இப்போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது.

1)    கீழ்ப் படிவம் (படிவம் 1 முதல் 3 வரை)

2)    மேல் படிவம் (படிவம் 4 முதல் 5 வரை)

ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 10 போட்டியாளர்களாக 20 போட்டியாளர்கள் தங்கள் திறமையைக் காட்டினர். ஒவ்வொரு பிரிவுக்கும் 3 வெற்றியாளர்கள் தெரிவு பெற்றனர்.

கீழ்ப் படிவ வெற்றியாளர்கள்

முதல் நிலை        :   ஹரிஹரன் த/பெ பன்னீர்செல்வன் 
                        (கோலசிலாங்கூர் ஸ்ரீ தஞ்சோங்         
                         இடைநிலைப்பள்ளி)

இரண்டாம் நிலை   :    குமாரவேல் தபெ வேலன்  (கிள்ளான், காப்பார் 
                        துங்கு இத்ரிஸ் ஷா இடைநிலைப்பள்ளி)

மூன்றாம் நிலை     :  டர்ஷன் ராவ் த/பெ காந்தராவ் (உலு லங்காட்,    
                       பண்டார் ரிஞ்சிங் இடைநிலைப்பள்ளி)


மேல் படிவ வெற்றியாளர்கள்

முதல் நிலை       :    தேவ்ராஜ் த/பெ லட்ஷ்மணன் (உலு லங்காட், 
                        தாமான் ஜஸ்மின் 2 இடைநிலைப்பள்ளி)

இரண்டாம் நிலை   :    சர்வேஷ்வரன் த/பெ ஆறுமுகம் (பெட்டாலிங் 
                        பெர்டாணா, தாமான் ஸ்ரீ மூடா இடைநிலைப் 
                        பள்ளி)

மூன்றாம் நிலை     :   சிவகாமி த/பெ சுப்பிரமணியம் (கோல லங்காட், 
                        தெலுக் பங்ளிமா காராங் இடைநிலைப்பள்ளி)


இந்நிகழ்ச்சிக்குத்  தமிழ்திரு.இராமன் அண்ணாமலை அவர்கள் (உதவி இயக்குநர், தமிழ்ப்பிரிவு சிலாங்கூர் மாநில கல்வி இலாகா) முன்னிலை வகிக்க, உயர்திரு. ஷாப்பி ஜாமான் பின் சிக்கந்தர் பாட்ஷா அவர்கள் (நிருவாக இயக்குநர் மலேசிய நண்பன் நாளிதழ்) பரிசளித்து நிறைவு செய்து வைத்தார்.