Saturday, April 28, 2012

இலக்கியப் பயிலரங்கம்

வணக்கம். கடந்த 18.04.2012, புதன்கிழமை, திட்டமிட்டப்படி எஸ்.பி.எம். இலக்கியப் பயிலரங்கம் இனிதே நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாவல், நாடகம், கவிதைகள் தொடர்பான விளக்கங்களை முறையே ஆசிரியர் பச்சைபாலன், ஆசிரியை இராஜேஸ்வரி, ஆசிரியர் கோபாலன் ஆகியோர் திறம்பட வழிநடத்திச்சென்றனர்.


மற்றொரு சிறப்பு அம்சமாக, ஆசிரியர் தர்மலிங்கம் அவர்களின் தன்னூக்க உரை அமைந்தது. இவ்வுரை கலந்துகொண்டோர் அனைவரையும் கவர்ந்தது என்றால் மிகையாகாது.

இந்நிகழ்ச்சியில் மற்றொரு சிறப்பு, இவ்வாண்டிற்கான இலவச இலக்கிய புத்தகங்கள் மாணவர்களிடம் சேர்ப்பிக்க ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டமையாகும். இதன்மூலம் இலக்கிய புத்த்தகங்கள் இல்லை என்ற குறைபாடு நீக்கப்பட்டுள்ளது. இதற்கு மாண்புமிகு அமைச்சர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியத்திற்கும் இலக்கிய கழகத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


No comments:

Post a Comment