Tuesday, April 17, 2012

சிலாங்கூர் மாநிலப் பணித்தியத்தின் இவ்வாண்டுக்கான முக்கிய நிகழ்ச்சிகள்


வணக்கம். இவ்வாண்டு நம் மாநிலப் பணித்தியம் சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டு நடத்தி வருகின்றது. 
அவை முறையே:-

1.     எஸ்.பி.எம். தமிழ்மொழிப் பயிலரங்கு
       
இப்பயிலரங்கு மாநிலத்திலுள்ள தமிழ்மொழி கற்பிக்கும் எல்லா  ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது (பி.ஓ.எல். ஆசிரியர்கள் உட்பட).    இப்பயிலரங்கு மாவட்ட வாரியாகப்   பின்வருமாறு நடத்தப்பட்டு வருகிறது.

எண்
மாவட்டம்
தேதி
இடம்
நேரம்
1
கோம்பாக் / உலு சிலாங்கூர்
07.4.2012 (சனி)
ஸ்ரீகாரிங் இடைநிலைப்பள்ளி
காலை 8.00
2
உலு லங்காட் / சிப்பாங்
28.4.2012 (சனி)
உலு லங்காட் மாவட்ட கல்வி இலாகா
காலை 8.00
3
பெட்டாலிங் உத்தாமா/ பெர்டாணா
28.4.2012 (சனி)
சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா
காலை 8.00
4
கிள்ளான் / கோல லங்காட்
28.4.2012 (சனி)
ஸ்ரீமுருகன் நிலையம், கிள்ளான்
காலை 8.00
5
சபாக் பெர்ணாம் / கோல சிலாங்கூர்
04.05.2012 (வெள்ளி)
ரந்தாவ் பஞ்சாங் இடைநிலைப்பள்ளி
காலை 8.00

     
2.     எஸ்.பி.எம். தமிழ் இலக்கிய பயிலரங்கு 

இப்பயிலரங்கு இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நாவல், நாடகம், கவிதை தொடர்பான விளக்கங்களைக் கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

            திகதி  :      18.04.2012
            இடம்  :      ஸ்ரீமுருகன் நிலையம், கிள்ளான்
            நேரம் :      காலை 8.00 முதல் மாலை 4.30 வரை


3.     சிலாங்கூர் மாநில இடைநிலைப்பள்ளிகளுக்கு  
      இடையிலான 19-வது கோ.சாரங்கபாணி கிண்ணப் 
      புதிர்ப் போட்டி 2012.

இப்போட்டியினைச் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பிரிவும் பந்திங், மெதடிஸ்ட் இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகமும் இணைந்து நடத்துகின்றன.

            திகதி  :      21.04.2012
            இடம்  :      ஜுக்ரா மண்டபம், பந்திங்
            நேரம் :      காலை 8.00 முதல் பிற்பகல் 1.30 வரை


4.     கவிதை ஒப்புவிக்கும் போட்டி 2012  

இந்த வருடாந்திர நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் மாவட்ட பணித்தியங்கள் தங்கள் மாவட்டங்களில் இப்போட்டியை மே மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். 


இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் நல்ல முறையில் நடைபெற ஆசிரியர்கள் அனைவரும் தங்களின் மேலான ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவார்கள் என நம்புகின்றோம். 

நன்றி. 


No comments:

Post a Comment